சென்னை

மிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மறுத்துள்ளார்.

இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது அவர்,

”தமிழக ஆளுநரிடம் சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.  அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கவில்லை.

எனவே நாளை நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.

ஆளுநர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளார். சங்கரையாவுக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது என்ற காரணத்தை ஆளுநர் கூறமுடியுமா?

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். இவ்வாறு மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.”

என்று தெரிவித்துள்ளார்,.