சென்னை

சென்னை கொளத்தூர் பல்லவன் சாலையில் முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு புதிய கால்பந்து மைதானத்தை திறந்து வைத்துள்ளார்.

சென்னை நகரை மேம்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  அதில் ஒரு பகுதியக இன்று சென்னை, கொளத்தூர் பல்லவன் சாலையில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கால்பந்து விளையாட்டு மைதானத்தைத் திறந்துவைத்தார். மேலும் சென்னை திரு.வி.க.நகரில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவையும் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.