சென்னை

நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.

 

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது.  இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது,

தற்போது அண்ணாமலை டில்லி சென்றுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  இன்று ல் சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிறகு செய்தியாளர்களிடம் சுதாகர் ரெட்டி, இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும், கூட்டணி தொடர்பாக பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.  இன்றைய கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பாஜக பூத் கமிட்டி அளவில் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் (5-ந்தேதி) பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.