சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று தமிழகம்,, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறு0பாடு காரணமாகக் கனமழை பெய்யலாம் எனச் சென்னை .வானிலை ஆய்வு மையம் எஸ்ஸாரித்துள்ளது
அதன்படி இன்று கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனீ திண்டுக்கல், கன்யாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சென்னை மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் அடுத்த ௪௮ மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் .வெப்பநிலை அதிகபட்சமாக 35-36 டிகிரி மற்றும், குறைந்த பட்சமாக 25-26 டிகிரி இருக்கலாம் ” எனவும் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel