சென்னை

ன்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

கடந்த 8 ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக மருத்துவமனைகளில் 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில்  நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.   இன்று டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதையொட்டி டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில அளவிலான கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.