சென்னை

ன்று கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப் படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது.

இந்த கலந்தாய்வு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும்,  சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த இடங்களுக்கு சுமார் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. ஜூலை 26 ஆம் தேதி அன்று அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலைத் தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இன்று கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.