டில்லி

ல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆஜராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்  பிரிஜ் பூஷனுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது/

பிரபல மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய டில்லி காவல்துறையினர் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராகக் கடந்த மாதம் 15ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

டில்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜூலை 18 அன்று இந்த வழக்கு விசாரணைக்காக  பட்டியலிடப்பட்டுள்ளதால் நேரில் ஆஜராக பூஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  பிரிஜ் பூஷன் சரண் தாம் ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.