ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 50-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த சர் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டர் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் ஷர்துல் தாக்கூரும் இணைந்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் மூன்றாம் நாளில், இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியான தருணத்தில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அரை சதம் அடித்து தனது உறுதியை வெளிப்படுத்தினார்.

அவரது அற்புதமான ஆட்டத்தால், ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 50-க்கும் அதிகமான ஸ்கோரைப் பெற்ற சர் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டர் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களின் லீக்கில் தாக்கூர் சேர்ந்தார்.

பிராட்மேன் 1930 – 1934 இல் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்தார், அவரைத் தொடர்ந்து 1985 – 1989 ல் அலன் பார்டர் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் தற்போது ஷரதுல் தாக்கூர் 2021 – 2023 ல் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது அடுத்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.