சென்னை:
3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வடைந்துள்ளது.

மார்ச் 1ம் தேதி (இன்று) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,120.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 உயர்ந்து ரூ.2,268க்கும் விற்பனை உ செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 3 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel