டெல்லி: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, திரிபுரா தேர்தல் பிப்ரவரி 16ந்தேதியும்,  நாகலாந்து, மேகாலயா  தேர்தல்  பிப்ரவரி 27ந்தேதி நடைபறும் என்றும் வாக்கு எண்ணிக்கை 3 மாநிலங்களிலும் மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிகிறது. நாகாலாந்து மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 12ம் தேதியிலும், மேகாலயா சட்டப்பேரவைக் காலம் மார்ச் 15ம் தேதியிலும், திரிபுராவின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியும் முடிகிறது. இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தொகுதிகள் தலா 60 தொகுதிகள் உள்ளன. இந்த  மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவித்தார்.

இன்று டெல்லியில் செய்தியளார்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,  தேர்தல் ஆணையம் வன்முறை அற்ற தேர்தல் நடத்த உறுதி பூண்டுள்ளது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறியவர், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் புதிதாக 2.28 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த 3 மாநிலங்களில்  97ஆயிரம் வாக்காளர்கள் 90வயதுக்கும் மேற்பட்டவர்கள்,2600 வாக்காளர்கல் 100 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதும்,  தேர்தலுக்கு முன்பாக 18வயது நிறைவடையும் இளைஞர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள், அந்த வகையில் 3 மாநிலங்களில் இருந்து 10ஆயிரம் பேர் புதிதாக வாக்காளராக விண்ணப்பித்து உள்ளனர் என்றார்.

மேலும், இந்த 3 மாநிலங்களிலும் சேர்த்து 376 வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்ட இருப்பதாக கூறியவர்,  நாகாலாந்து, மேகாலயா, திரிபுராவில் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும்,  3 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 62.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  இதில் 31.47 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். 1.76 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர் என்றார்.

நாகாலாந்து மாநிலத்துக்கு மார்ச் 12ம் தேதியும், மேகாலாயாவுக்கு மார்ச் 15ம் தேதியும், திரிபுராவுக்குமார்ச் 22ம் தேதியும் சட்டப்பேரவைக் காலம் முடிகிறது.

திரிபுரா மாநிலத்துக்கு பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

3 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும்

3 மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

திரிபுரா மாநிலத்தில்,  வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள், 31ம் தேதி வேட்புமனு பரிசீலனையும் பிப்ரவரி 2ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள  மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில், வேட்புமனுத்தாக்கல்  ஜன.31-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம்தேதி, பிப்ரவரி  8ம்தேதி வேட்புமனு பரிசீலனையும் நடக்கும். 10ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்