சென்னை:
பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel