சென்னை: தமிழ்நாட்டில், தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வகையில் தமிழகஅரசு சில பூச்சி மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி.  அபாயகரமான அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்பட  6 பூச்சிக்கொல்லி மருந்துகள் 60 நாட்களுக்கு தடை  விதிக்கப்பட்டு உள்ளதுடன், மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டு உள்ளது.

இதன்படி monocrotophos, profenofos, acephate, profenofos + cypermethrin, chlorpyrifos + cypermethrin உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.