சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு  தமிழகம் நோக்கி வருகிறது. இதனால் சென்னை உள்பட கடற்படை மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தீவிரமடையும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், ஆனால் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றார்.

இதன் காரணமாக,  தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், 10 ந்தேதி முதல் 13 வரை ஓரிரு இடங்களில் கனமழையும்,11,12 தேதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.  வரும் 14ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வரும் 12ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்11, 12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பபு உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.