சென்னை: பொன்னையனுடன் எப்போது பேசினேன் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோலப்பன். கடந்த 9ந்தேதி இரவு 10 மணி அளவில் பேசியதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் கூறிய பொன்னையன்,   நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது – மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். என் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆடியோ வெளியிட்டுள்ளனர் என மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில்,  என்னுடன் பேசியது பொன்னையன் தான்  என குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி கோலப்பன் பதில் அளித்துள்ளார். பொன்னையன் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும்,  மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. பொன்னையன் எப்போது என்னிடம் பேசினார் என்பதற்கான ஆதாரம் உள்ளது என்றவர் கடநத  9.07.22 அன்று இரவு 10மணி அளவில் தன்னுடன் பேசியதாக தெரிவித்துள்ளார். பொன்னையன் அண்ணன் குமுறலுடன், இது வெளியே வர வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் பேசினார் என்றும் கூறியுள்ளார்.