சென்னை:
ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி தான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது என்றும், ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel