சென்னை:
ரேசன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel