சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel