டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில்,  3,35,939 பேர் சிகிச்சை முடிந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் மேலும்,  2,35,532 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.  இது நேற்றைய பாதிப்பை விட 15,677 குறைவு. நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 4,08,58,241 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3,35,939 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,83,60,710 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 871 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் 4,93,198 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில்  1,01,278 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 56,72,766 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1,65,04,87,260 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,59,434 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 72,57,74,705* மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன.