சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  நாளை நடைபெறவிருந்த 18வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

இந்த தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறவுள்ள  நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1,600 முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.