சென்னை

மிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய  கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவி உள்ளது.  இன்று மாவட்ட வாரியான ஒமிக்ரான் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 117 பேர் பாதிக்கப்படுள்ளனர்.  அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாகச் சென்னையில் 90 பேர் பாதிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும்  குணம் அடைந்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் குணமடைந்துள்ளனர்.

மதுரையில் 4 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும்  குணமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூவர் பாதிக்கப்பட்டு மூவரும் குணம் அடைந்துள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருவர் பாதிக்கப்பட்டு இருவரும் குணம் அடைந்துள்ளனர்

சேலம், திருவாரூர், மாவட்டத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.

கோவை, புதுக்கோட்டை, தஞ்சை,  திருச்சி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணம அடைந்துள்ளார்.