நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகனும், நடிகருமான அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த ஒரு விளம்பர படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தெலங்கானா அரசு பஸ் போக்குவரத்து கழகம், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியுள்ளது.

கூட்டநெரிசலில் அரசு பேருந்தில் செல்வதற்கு பதில் இந்த பைக் டாக்சியில் செல்லலாம் என்பது போல் வசனம் அமைத்துள்ளது அந்த விளம்பரத்தில் .

இந்நிலையில் தெலங்கானா அரசு பஸ் போக்குவரத்து கழக ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், “நடிகர், நடிகைகள் மற்றவர்களை விட சமூக பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். அப்படி இருக்கையில் பஸ் போக்குவரத்து குறித்து இழிவாக பேசும் விளம்பர படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சட்டப்படி இதனை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.