கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த செம்பருத்தி ஹீரோயின் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி நடிகர் ஆர்யன் ஆகியோர் இந்த வருடம் திருமணம் செய்ய உள்ளதாக முன்பே தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று ஷபானா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் இன்று (11.11.2021) அவர்கள் திருமணம் நடந்து முடிந்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘வேலைக்காக சென்னைக்கு வந்தேன்.. சென்னையில் செட்டில் ஆவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. சீரியல் முடிச்சிட்டு மறுபடி ஊருக்கு போகணும்னு தான் நான் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா, கடவுளோட திட்டம்.. நான் சென்னையிலேயே செட்டில் ஆகுற மாதிரி ஆகிடுச்சு. நீங்க எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டுட்டே இருந்தீங்க.. அதுக்காகத்தான் இந்த வீடியோ.. இன்னைக்கு எனக்கு கல்யாணம்.. உங்க எல்லாரோட வாழ்த்தும் எனக்கு தேவை.. !’ என பதிவிட்டிருக்கிறார் ஷாபனா.

https://www.instagram.com/p/CWHqfPeFkPq/