கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் 29ம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆரோக்கியமாக இருந்த அவர் திடீர் என்று இறந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

புனீத்தின் திடீர் மரணத்தை அடுத்து பலர் பெங்களூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு தங்கள் இதயம் எப்படி இருக்கிறது என்று பரிசோதனை செய்ய படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாராயண் எனும் 46 வயது நபர் 180 கிலோமீட்டர் பயணம் செய்து பெங்களூருக்கு வந்து இதய பரிசோதனை செய்திருக்கிறார்.

பெங்களூரில் இருக்கும் Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research-ன் டைரக்டர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் : கடந்த 3 நாட்களாக ஏகப்பட்ட பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். தினமும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போம். ஆனால் தற்போது தினமும் 1,800 பேர் வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.