சென்னை

கோவை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்கு பெற்ற வேட்பாளருக்கு எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்குக் கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.

இங்கு மொத்தம் 1551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள் ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார்.

பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு ஓரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார். கார்த்திக் 4 வது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் அந்த வார்டில் வாக்குகள் இல்லை. இந்த 9 வது வார்டில் வாக்கே இல்லாத பா.ஜ.க வேட்பாளர் காரத்திக் ஓரே ஒருவர் வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநரை நேரில் சந்தித்தார். அவர் தமிழகத்தில் நடக்கும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளைக் கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குப் பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

 

[youtube-feed feed=1]