சென்னை: சத்தனக்கட்டை பதுக்கி வைத்திருந்தாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23ந்தேதி லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில்,   அவரது வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெங்கடாசலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறபிபட்டது.

இந்த நிலையில், தற்போது வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீட்டில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.