சென்னை:
ழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஸ்கர் என்பவர் ரூ 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும்பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வும் வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
மேலும் இடைநீக்கத்துக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல் அதிகாரி பாஸ்கரனை பணியில் சேர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.