சார்ஜா

நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி முடிந்துள்ள நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டது.  தற்போது இந்த போட்டிகளின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.  இதில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் சென்னை அணியும் மோதின,

இந்த போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறி உள்ளது.  இதன் மூலம் இந்த போட்டிகளில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்னும் பெருமையை பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் 3 முறை வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு 11 ஆம் முறையாக முன்னேறி உள்ளது   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்ற ஆண்டு மட்டுமே லீக் சுற்றுடன் வெளியேறியது.  மற்ற எல்லா முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றை எட்டி உள்ளது.