சென்னை:
மிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, வக்பு வாரிய சொத்து விபரங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுமா? என்று பாபநாசம் உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என்று தெரிவித்தார்.