சென்னை

மீண்டும் சென்னை மெரினா கடற்கரைக்குக் கூட்டமாக மக்கள் வரத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் அதிகமாகப் பரவியதால் மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டது.   அவ்வகையில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் வர தமிழக அரசு தடை விதித்தது.  தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது.

இதையொட்டி தமிழக அரசு கடந்த திங்கள் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.  சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருது மக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரைக்கு  வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையைக் கொண்டாட ஏராளமானோர் மெரினா கடற்கரைக்கு வந்தனர்.  அதிகாலை முதலே கடற்கரையில் மக்கள் கும்பலாகக் கூடினார்கள்.   குழந்தைகள் குதிரை சவாரி செய்தும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியும் பொழுதைக் கழித்தனர்.  பல குடும்பத்தினர் மதிய உணவுடன் மெரினா கடற்கரைக்கு வந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்