டோக்கியோ:
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது.

பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார், 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
பாராஒலிம்பிக் போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்களை பவினாபென் பட்டேல் இன்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், நிஷாத் குமார் மற்றொரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel