வுகாத்தி

சாம் மாநிலத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள் மிதந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  அத்துடன் அசாமின் மிகப் பெரிய நதியான பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளம் அதிகரித்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் நீர் புகுந்துள்ளது.

குறிப்பாக பிஸ்வநாத், பொன்கையான், கிராங், டேமாஜி, திப்ருகர், ஜோர்ஹட், லகிம்பூர், மஜூலி, சிவசாகர் போன்ற 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.  இங்குள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளன.  இந்த மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வெள்ளத்தில் சுமார் 1.33 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதீக்கபப்ட்டுள்ளனர்.  இவர்களை மீட்கும்  பணியில் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.  சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே படகுகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களைத் தவிர  மீதமுள்ளோரை மீட்கும் பணி இரவு பகலாக நடப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் வெள்ளை நீரின் அளவு மேலும்  மேலும் உயர்ந்து வருகிறது.   மீட்புப் பணிகளில் வெள்ளம் அதிகரிப்பால் தொய்வு ஏற்பட்டுள்ளது.   மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உருவாகி உள்ளதாகப் பேரிடர் மீட்புப்படையினர் கவலை தெரிவித்துள்ளனர்.