விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி ஒப்பந்தமாகியுள்ளார் . ‘நாட் ஏ காமன் மேன்’ என டேக் லைன் மட்டும் வைத்திருந்தனர். மலையாளத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பாபுராஜ் இதில் நடித்துள்ளார்.

அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தடைபட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விஷாலின் 31 வது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.