டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செர்பியா-வைச் சேர்ந்த போரிஸ்லவா ரென்கோவிச்-சை தோற்கடித்தார்.

11-5, 11-6, 11-7 என்ற நேர் செட்களில் மொத்தம் 18 நிமிடத்தில் ஆட்டத்தை முடித்து வெற்றிபெற்ற பவினா படேல் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போரிஸ்லவா ரென்கோவிச்-சை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும் இந்தியாவுக்கு, பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் உறுதியாகி இருக்கிறது.