டோக்கியோ: 
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் இந்தியாவின் பவினா பென் பட்டேல்.  டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர்,  முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் பிரிட்டன் வீராங்கனை மேகனை 3 – 1 என்ற சேட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய வீராங்கனை பவினா பென் பட்டேல், கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற  ஆசிய பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் மற்றும் கடந்த 2011-ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.