நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சரும பராமரிப்புக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

சுத்தமான இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் இந்நிறுவனத்துக்கு பூமித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்தன்மை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம் என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

https://www.instagram.com/p/CSyhUEdJNMm/