சென்னை: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 1,87,983 பேர் பயனடைந்துள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தடுப்பு பணிகள், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியதுடன், முதியோர்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்படி, “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் மருத்துவ சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,   நீரிழிவு , சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் , சிறுநீரக சிகிச்சை முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம்  செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்டி  இன்று காலை 7 மணி வரை 1,87,983 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. நீரிழிவு நோய்க்காக 54,468 நபர்களும், உயர் இரத்த அழுத்த நோய்க்கு 84,583 நபர்களும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் 37, 519  நபர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 24 சிறுநீரக நோயாளிகளுக்கு செய்துகொள்வதற்கு தேவையான வைகளும் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.