சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 177 பேரும் கோவையில் 198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,604 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,02,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,734 பேர் உயிர் இழந்து 25,48,868 பேர் குணம் அடைந்து தற்போது 18,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,42,729 பேர் பாதிக்கப்பட்டு 8,383 பேர் உயிர் இழந்து 5,32,251பேர் குணம் அடைந்து தற்போது 2,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 195 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,34,444 பேர் பாதிக்கப்பட்டு 2,241 பேர் உயிர் இழந்து 2,29,988 பேர் குணம் அடைந்து தற்போது 2,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,564 பேர் பாதிக்கப்பட்டு 2,422 பேர் உயிர் இழந்து 1,61,005 பேர் குணம் அடைந்து தற்போது 1,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.