சென்னை: மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘தகைசால் விருது’ மற்றும் ரூ.10 லட்சம் வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. விருது பெறுபவர்களுககு சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் நேரடியாக விருதை வழங்குவார் என்றும், உடன் பாராட்டு சான்றிதழும், ரூ.10 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்ததார்.
அதன்படி நடப்பாண்டு தகைசால் விருதுக்கு முதல் தமிழ் ஆளுமையாக விடுதலை போராட்ட வீரரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வயது முதிர்வு காரணமாக சங்கரய்யா நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க முடியாததால், முதல்வர் ஸ்டாலின் இன்றே அவரது வீட்டுக்கு சென்று, சங்கரய்யாவை நேரில் சந்தித்து விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.10 லட்சம் வழங்கி கவுரவித்தார்.

இதையடுத்து, விருது தொகையை சங்கரய்யா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சங்கரய்யா திருப்பி வழங்கினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மற்றும் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
https://twitter.com/i/status/1426534514281484293