சென்னை: பிளஸ்2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்  இன்று இணையதளத்தில் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பிளஸ்2 மாணாக்கர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, தேர்ச்சி மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாதவர்களும், தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி சரியான மதிபெண்ணை பெறலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்? விண்ணப்பட்டம் பெறப்பட்டது.  அதன்படி, துணைத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

இதுகுறித்து.  அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31-ந்தேதி (இன்று) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.