சென்னை: நரிக்குறர் பெண்ணுக்கு தையல் மெஷினுடன் படிக்கவும் உதவி செய்வதாக  அமைச்சர் சிவங்கர் வாக்களித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் துறை அமைச்சராக இருப்பவர்  எஸ்.எஸ். சிவசங்கர். இவர் சமீபத்தில் பொதுமக்களை சந்தித்தபோது, அவரிடம் நரிக்குறவர் பெண் ஒருவர் உதவி வேண்டி மனு கொடுத்தார். அந்த பெண், தான் 12th வரை படிச்சிருக்கேன். எனக்கு ஒரு  தையல் மிஷின் தாங்க என உதவி கோரினார்.

அதைக்கேட்ட அமைச்சர், தையல் மெஷின் வாங்கித்தோரேன்… ஆனால், அதையே நம்பினால், காலம் முழுவதும் தையல் மிஷினே வாழ்க்கையாகிடும்” அதனால், ” மேல் படிப்புக்கு உதவியும் செய்கிறேன்..”நன்றாக படித்து நாலு பேருக்கு முன்மாதிரியாக இரு.. என்று வாழ்த்தினார். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய தனது உதவியாளரிடம் அறிவுறுத்தினார்.