ஈரோடு:
ரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு – திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினேன்.

கார் ஆம்புலன்ஸ் சேவை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.