
தெறி படத்தை அடுத்து டைரக்டர் பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்குகிறது. . விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் சதீஷ், ஸ்ரீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இப்படக்குழுவினரை நடிகர் விஜய் சமீபத்தில் சந்தித்துப் பேசியனாப், இதை சந்தோஷ் நாராயணன் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆகியோர் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel