சென்னை: தமிழகத்தில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன .

மே 26ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்: திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி,

திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.

சென்னை உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

உணவகங்கள், ஹோட்டல்கள், , தேநீர் கடைகளில் மட்டுமே பார்சல் மட்டுமே அனுமதி.