சேலம்:
சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாதையன், பெரியசாமி. இவர்கள் இருவரும் சேலம் மாவட்ட வனப்பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாதையன், பெரியசாமி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மாதையன், பெரியசாமி இருவரும் நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி மான், முயலை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel