டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இன்று காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்துள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமாக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ராம்நாத் கோவிந்த் உடல்நிலை குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel