பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து சூர்யா தனது ட்விட்டர் பதிவில், “மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பினார் நடிகர் சூர்யா என சன் குழுமமும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது .

 

[youtube-feed feed=1]