சென்னை: திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி, சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் அறிவித்தார்.

இந் நிலையில் திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டம் குறித்து அவர் இன்று ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் ஸ்டாலின் கூறி இருப்பதாவது:

திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது. குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள்.

பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? குடும்பத்தலைவியரே கேட்பர்! என்று குறிப்பிட்டு உள்ளார்.