பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா.

பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, சோம், ரியோ மற்றும் கேபி ஒரு குழுவாக செயல்படுகின்றனர் என்று சில போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பே குற்றச்சாட்டு வைத்தனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இதற்கு முன்பதாக அர்ச்சனா ஜீ தமிழில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வந்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விஜய் டிவியில் காதலர் தினத்தன்று ஒளிபரப்பாக இருக்கும் ‘காதலே காதலே’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த செய்தியை ஆல்யா மானசாவின் கணவரும் நடிகருமான சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே இனி விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.