மும்பையின் மலாட் பகுதியில் உள்ள பங்களாவில் நீலப்படங்கள் எடுக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.

ஆபாச படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணி புரிந்த பெண்ணும் இதில் அடக்கம்.

கெஹானா வசிஸ்த்

அந்த கும்பல் பயன்படுத்திய விலை உயர்ந்த கேமிரா, லேப்டாப், 6 செல்போன்கள், கைப்பற்றப்பட்டன.

வசன ஸ்கிரிட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக நடிகை கெஹானா வசிஸ்த் என்பவருக்கு ஆபாச சினிமா எடுப்பதில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்த போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தன.

செல்போனில் ஆபாச படம் பிடித்து, அதனை ஆன் லைனில் பதிவேற்றி அவர் பணத்துக்கு விற்று வந்துள்ளார்.

“87 நீலப்படங்களை அவர் ஷூட்டிங் செய்துள்ளார். அந்த நடிகை ‘மிஸ் ஆசியா பிகினி’ பட்டம் பெற்றவர். விளம்பர படங்களில் நடித்து, பின்னர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்” என போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கெஹானா, தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

– பா. பாரதி