ள்ளக்குறிச்சி

திமுக பிரமுகரான விவசாயி ஒருவர் மற்றொரு விவசாயியுடன் ஏற்பட்ட தகராற்றில் அவர் காதை கடித்து துப்பி உள்ளார்.

ஆலத்தூர் என்னும் கிராமம் கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ளது.  இந்த கிராமத்தில் உள்ள விவசாயியான கோவிந்தன் என்னும் அதிமுக அம்மா பேரவை செயலராக உள்ளார்.  இவர் தனது வயலில் பயிரிட்டுருந்த கரும்புகளை அறுவடை செய்துள்ளார்.    அப்போது மீதமுள்ள காய்ந்த சருகுகளை தீ வைத்து எரித்துள்ளார்.  அண்டஹ் தீ அருகில் இருந்த நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை எரித்து சேதம் ஆகி உள்ளது.

அந்த நிலத்தின் உரிமையளரான ராஜா என்பவர் கோவிந்தனிடம் சென்று நெருப்பு வைத்தது குறித்து தகராறு செய்துள்ளார்.  இந்த வாய்ச் சண்டை கைகலப்பாக உரு மாறியது.  அந்த கை கலப்பில் அதிமுக பிரமுகர் கோவிந்தன் மற்றொரு விவசாயியான ராஜாவின் வலது காதை கடித்து துப்பி உள்ளார். வலியல் துடித்த ராஜா ரத்தம் சொட்ட் சொட்ட  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று ராஜாவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.  சக விவசாயியின் காதை கடித்து துப்பிய அதிமுக பிரமுகர் கோவிந்தன் மீது வழக்கு பதியப்பட்டது.  காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.